நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி : சென்னை மாநகராட்சியில் பிஆர்ஓ நியமனம்

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் மக்கள் தொடர்பு அலுவலர் காலிப் பணியிடம் நிரப்பப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சென்னை மாநகராட்சியில் மக்கள் தொடர்பு அலுவலரே இல்லாமல் செயல்பட்டு வந்தது.…

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் மக்கள் தொடர்பு அலுவலர் காலிப் பணியிடம் நிரப்பப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சென்னை மாநகராட்சியில் மக்கள் தொடர்பு அலுவலரே இல்லாமல் செயல்பட்டு வந்தது. APROவிற்கு பொறுப்பு மக்கள் தொடர்பு அலுவலர் என்ற கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டிருந்தது. இதனை நியூஸ் 7 தமிழ் கடந்த 10 ஆம் தேதி செய்தியாக வெளியிட்டிருந்தது.

இதன் எதிரொலியாக சென்னை மாநகராட்சியில் புதிதாக மக்கள் தொடர்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட உதவி இயக்குனராக இருந்த  செந்தில்குமார், பெருநகர சென்னை மாநகராட்சியின் மக்கள் தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் ஏழு உதவி இயக்குனர்களுக்கு, துணை இயக்குனர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக சென்னை மாநகராட்சியில் மக்கள் தொடர்பு அலுவலர் இல்லாததை நியூஸ்7 தமிழ் சுட்டிக்காட்டிய நிலையில், புதிதாக பிஆர்ஓ நியமனம் செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.