நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: மாணவர்கள் உறுதிமொழியேற்பு!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அந்த வரிசையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பள்ளி மாணவ- மாணவியர் பாலின சமத்துவ…

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அந்த வரிசையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பள்ளி மாணவ- மாணவியர் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

சிம்மக்கல் மீனாட்சி மெட்ரிக் பள்ளி

அந்த வகையில், மதுரை சிம்மக்கல்லில் இயங்கி வரும் மீனாட்சி மெட்ரிக்குலேசன் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதனை தொடர்ந்து மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறை அளிக்க அரசை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் திரளான மாணவர்கள் கையெழுத்திட்டனர்.

நியூஸ் 7 தமிழினின் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கம் மிகச்சிறந்த முன்னெடுப்பு என்றும், மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என மீனாட்சி மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர் முத்துராஜூ கூறினார்.

எழுமலை விஸ்வ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

உசிலம்பட்டி அருகே எழுமலை விஸ்வ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அளிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கையொப்பமிட்டனர்.

பணகுடி புனித அன்னாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

நெல்லை மாவட்டம் பணகுடி புனித அன்னாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகரென கொள் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆயிரத்து 500 மாணவர்கள் விழிப்புணர்வு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். இதை தொடர்ந்து மாதவிடாய் காலத்தில் விடுமுறை வழங்க வலியுறுத்தியும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் திரளான மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு
கையெழுத்திட்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.