”நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சாமானியனின் குரலாக விளங்கி வருகிறது” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நியூஸ் 7 தமிழ் செய்தி தொலைக்காட்சி தமிழ் ஊடக உலகில் முன்னணி ஊடகமாக வலம் வருகிறது. தமிழ் சமூகத்தில் செய்திகளை வழங்கும் பல தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் தனித்துவமான பல புதிய நிகழ்ச்சிகளை நியூஸ் 7 தமிழ் வழங்கி வருகிறது.
வெறுமனே செய்திகளை வாசித்துவிட்டு கடந்து விடாமல் மக்களின் பிரச்னைகளை மக்கள் மன்றத்தில் விவாதித்து அதனை ஆளும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான பல நல்ல தீர்வுகளை பெற்றுத் தந்துள்ளது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி.
நியூஸ் 7 தமிழின் தாரக மந்திரமான ”பொறுப்பும் பொதுநலனும்” என்பதற்கு ஏற்றவாறு பொறுப்புடனும் , பொது நல சிந்தனையோடு செயல்பட்டு வரும் நியூஸ் 7 தமிழ் ஊடக உலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு “பாலின சமத்துவ மாதமாக” அறிவித்து “நிகரென கொள்” எனும் நிகழ்ச்சியை நடத்தியது நியூஸ்7 தமிழ்.
நியூஸ் 7 தமிழின் கேள்வி நேரம், அறச்சீற்றம், அன்புப் பாலம், வையத் தலைமை கொள், ஃபீனிக்ஸ் மனிதர்கள், நான்ஸ்டாப் 100 போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர்கள் உண்டு. தமிழ் ஊடக உலகில் பிரதான சேனலை தவிர்த்து விளையாட்டு, விவசாயம், பக்தி , உடல்நலம் என தனித்தனி சேனலை கொண்ட ஒரே தமிழ் ஊடகம் நியூஸ் 7 தமிழ் தான் மட்டும்தான்.
இந்த நிலையில் நியூஸ் 7 தமிழ் 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பத்தாவது ஆண்டியில் நுழையும் நியூஸ் 7 தமிழுக்கு வாழ்த்து தெரிவித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது..
பொறுப்புடனும் பொதுநலனுடனும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தன்னுடைய பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சாமானியனின் குரலாக விளங்கி வருகிறது. கிராமங்கள் மற்றும் மலவாழ் மக்களின் அடிப்படை பிரச்னைகளை கையில் எடுத்து சாதரண மக்களின் குரலாக செயல்படுகிறது. அதுபோல மத்திய அரசின் சாதனைகள், தமிழரின் பெருமை மற்றும் தமிழ் கலாச்சாரம், பாரம்பரியத்தை மக்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக பல நல்ல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நியூஸ் 7 தமிழுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.







