”நடுநிலையான செய்திகளை சுவாரஸ்யமாக நியூஸ் 7 தமிழ் வழங்கி வருகிறது” என பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நியூஸ் 7 தமிழுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
நியூஸ் 7 தமிழ் செய்தி தொலைக்காட்சி தமிழ் ஊடக உலகில் முன்னணி ஊடகமாக வலம் வருகிறது. தமிழ் சமூகத்தில் செய்திகளை வழங்கும் பல தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் தனித்துவமான பல புதிய நிகழ்ச்சிகளை நியூஸ் 7 தமிழ் வழங்கி வருகிறது.
வெறுமனே செய்திகளை வாசித்துவிட்டு கடந்து விடாமல் மக்களின் பிரச்னைகளை மக்கள் மன்றத்தில் விவாதித்து அதனை ஆளும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான பல நல்ல தீர்வுகளை பெற்றுத் தந்துள்ளது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி.
நியூஸ் 7 தமிழின் தாரக மந்திரமான ”பொறுப்பும் பொதுநலனும்” என்பதற்கு ஏற்றவாறு பொறுப்புடனும் , பொது நல சிந்தனையோடு செயல்பட்டு வரும் நியூஸ் 7 தமிழ் ஊடக உலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு “பாலின சமத்துவ மாதமாக” அறிவித்து “நிகரென கொள்” எனும் நிகழ்ச்சியை நடத்தியது நியூஸ்7 தமிழ்.
நியூஸ் 7 தமிழின் கேள்வி நேரம், அறச்சீற்றம், அன்புப் பாலம், வையத் தலைமை கொள், ஃபீனிக்ஸ் மனிதர்கள், நான்ஸ்டாப் 100 போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர்கள் உண்டு. தமிழ் ஊடக உலகில் பிரதான சேனலை தவிர்த்து விளையாட்டு, விவசாயம், பக்தி , உடல்நலம் என தனித்தனி சேனலை கொண்ட ஒரே தமிழ் ஊடகம் நியூஸ் 7 தமிழ் தான் மட்டும்தான்.
இந்த நிலையில் நியூஸ் 7 தமிழ் 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நியூஸ் 7 தமிழுக்கு வாழ்த்து தெரிவித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது..
“ ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நியூஸ் 7 தமிழுக்கு வாழ்த்துக்கள். நடுநிலையான செய்திகளை சுவாரஸ்யமாக நியூஸ் 7 தமிழ் வழங்கி வருகிறது. பத்தாவது ஆண்டில் மட்டுமல்ல இன்னும் பல ஆண்டுகள் ஊடகத் துறையில் வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என வாழ்த்துகிறேன்” என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.







