உயர்கல்வி பயில உள்ள மாணவர்களுக்காக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி சென்னையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
மதுரை, கோவை வெற்றியை தொடர்ந்து தலைநகர் சென்னையில் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் விதமாக நியூஸ் 7 தமிழ் பிரமாண்ட கல்விக் கண்காட்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நியூஸ் 7 தமிழ் கல்வி கண்காட்சி தொடங்கியது. இந்த கல்வி கண்காட்சியை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இக்கண்காட்சியில் 20 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் சார்ந்த அரங்குகள் இடம்பெற்றுள்ளன. முதல் நாளான நேற்று சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆர்வத்துடன் மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் வருகை தந்து பார்வையிட்டு பயன்பெற்றனர். இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வரும் கல்வி கண்காட்சியிலும், ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் வந்து கலந்துகொண்டு தாங்கள் தேர்வு செய்து படிக்க வேண்டிய உயர்கல்வி படிப்புகள் குறித்து ஆர்வமுடன் கேட்டு அறிந்து வருகின்றனர்.
கண்காட்சிக்கு வரும் மாணவர்கள் பேசுகையில், நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள இந்த கல்வி கண்காட்சி எங்களைப்போன்ற மாணவர்களுக்கு மிகவும் சிறப்பான முறையில் வழிகாட்டும் வகையிலும், உயர்கல்வி குறித்து எங்களிடம் இருக்கும் பயத்தையும், குழப்பத்தையும் போக்கி, புதிய உத்வேகத்தையும், தெளிவையும் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. இதுபோன்ற பயனுள்ள நிகழ்ச்சியை நடத்தி மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் நியூஸ் 7 தமிழுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாக கூறினர்.
- பி.ஜேம்ஸ் லிசா