பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்து வருகிறது. அதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் பாலின சமத்துவ உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுத்துள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் நியூஸ் 7 தமிழின் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், கட்சி நிர்வாகிகள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து நடைபெற்ற மாதவிடாய் விடுமுறை விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்துக்கும் ஆதரவு தெரிவித்து டிடிவி தினகரனும், அக்கட்சி நிர்வாகிகளும் கையெழுத்திட்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









