முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நியூஸ் 7 தமிழ் “நிகரென கொள்” முன்னெடுப்புக்கு கிடைத்த வெற்றி : 3 நாட்கள் விடுப்பு அறிவித்த பள்ளி நிர்வாகம்

உத்திரமேரூர் அருகே குப்பையநல்லூர் லயோலா மேல்நிலைப் பள்ளியில், நியூஸ் 7 தமிழ் முன்னெடுப்பு காரணமாக ஆசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்கள் மாதவிடாய்க் காலங்களில் எந்த முன்னறிவிப்பும் இன்றி மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று அந்தப் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நியூஸ் 7 தமிழ் நிகரென கொள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம், குப்பையநல்லூர் லயோலா மேல்நிலைப் பள்ளியில் நிகரென கொள் 2023 நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் பிரபு தலைமையில் ஆசிரியர்களும் மாணவர்களும் பாலின சமத்துவ உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு விழிப்புணர்வு இயக்கத்தில் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் மாணவர்களிடம் பாலின சமத்துவக் கொள்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனைத் தொடர்ந்து, நியூஸ் தமிழ் முன்னெடுத்துள்ள மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு இயக்கம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டு பள்ளி நிர்வாகம் எந்த முன்னறிவிப்பும் இன்றி ஆசிரியைகளும், பெண் ஊழியர்களும் மாதவிடாய்க் காலத்தில் எந்த முன்னறிவிப்பும் இன்றி விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

மாதவிடாய்க் காலங்களில் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதற்கு வழிகாட்டியாக இருந்த நியூஸ்7 தமிழுக்கு பள்ளியின் ஆசிரியர்கள், பெண் ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக்கை

Halley Karthik

கொரோனாவால் ஒரே நாளில் 460 பேர் உயிரிழப்பு

Halley Karthik

எனது சாதனையை நானே முறியடித்துள்ளேன்: பிரதமர் மோடி பெருமிதம்

Arivazhagan Chinnasamy