‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்னாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:
*CRPF மற்றும் CISF படைகளின் இரு அடுக்கு பாதுகாப்புடன், இந்திய விமானப்படை (IAF) மூலம் வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களைக் கொண்டு செல்லும் வசதி.
*செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய நான்கு அடுக்கு CCTV கண்காணிப்பு.
*தேர்வு மையத்திற்குள் நுழைவதற்கு முன் பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகாரச் (facial recognition) சரிபார்ப்பு.
*பல கட்டங்களாக மேற்கொள்ளப்படும் உடல் பரிசோதனை (frisking).
*பிரதமர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்புடன் கூடிய பல அடுக்கு மேற்பார்வை அமைப்பு.
ஆம், நீங்கள் படித்தது சரிதான். இவை உயர்மட்ட, ரகசியமான, ராணுவத் தரத்திலான மென்பொருளை வாங்குவதற்கான ஏற்பாடுகள் அல்ல; இவை 2026 ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள NEET மறுதேர்வுக்காகக் கல்வி அமைச்சகம் செய்துள்ள ஏற்பாடுகள்.
கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தீவிர கண்காணிப்பு மூலம் வினாத்தாள் கசிவைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை ஒவ்வொரு மாணவரும் பாராட்டுவார்கள். ஆனால், நுழைவதற்கு முன் அதிகரிக்கப்பட்ட சோதனைகள், நீண்ட நேர உடல் பரிசோதனை மற்றும் மொத்தத் தேர்வு நேரத்தை 180 நிமிடங்களிலிருந்து 195 நிமிடங்களாக அதிகரிப்பது ஆகியவை, ஏற்கனவே மாணவர்களிடம் பெருகிவரும் தேர்வு குறித்த மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
வினாத்தாள் கசிவைத் தடுக்க அரசு நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும், பல மாதங்களாகத் தயாராகி வந்த ஒரு தேர்வை எதிர்கொள்ளும் இளம் மாணவர் மீது சுமத்தப்படும் கூடுதல் சுமையை அது மறந்துவிட்டது. இது நமது தேர்வு முறையின் நோக்கத்தையும், ‘தேர்வு மன அழுத்தத்தைக் குறைத்தல்’ என்ற NEP 2020-ன் இலக்கையும் சிதைப்பதாக அமைகிறது.
தேர்வுக்கான இத்தனை ஏற்பாடுகள் இருந்தபோதிலும், நுழைவுச் சீட்டுகளைப் (admit cards) பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் உள்ளன; அவற்றை விரைவில் சரிசெய்வதாக NTA மாணவர்களுக்கு உறுதியளித்துள்ளது.
ஆம், அர்த்தமுள்ள தீர்வுகள் தேவைப்படும் சவால்கள் உள்ளன. இருப்பினும், NEET மறுதேர்வுக்காக வகுக்கப்பட்டுள்ள அணுகுமுறை சிக்கலைத் தீர்க்காமல், மாறாகப் புதிய சிக்கல்களை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது என்பது எனது கவலையாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




