பள்ளி மாணவி உயிரிழப்பு முயற்சி

ராசிபுரம் அருகே 8 ம் வகுப்பு மாணவி உயிரிழப்புக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரியாகவுண்டம் பட்டியை சேர்ந்தவர் சுமையா. இவர் அந்த பகுதியில் உள்ல பள்ளியில் 8…

ராசிபுரம் அருகே 8 ம் வகுப்பு மாணவி உயிரிழப்புக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரியாகவுண்டம் பட்டியை சேர்ந்தவர் சுமையா. இவர் அந்த பகுதியில் உள்ல பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் தந்தை குடும்ப சண்டை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சுமையா தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் வலி தாங்க முடியாமல் கத்திய அவரது அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சுமையா ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி, அவரை மேல்சிகிச்சைகாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக நாமகிரிபேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.