என்.சி.எல் கிரிக்கெட் தொடரில், மதுரை தியாகராஜர் கல்லூரியை, 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வெற்றி பெற்றது.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரை மண்டலத்தில், இன்று மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியும், தியாகராஜர் கல்லூரியும் மோதின.
இதையும் படியுங்கள் : NCL 2023 : பொள்ளாச்சி PA பொறியியல் கல்லூரியை வீழ்த்தி கோவை JCT பொறியியல் கல்லூரி அபார வெற்றி
இதில் டாஸ் வென்ற மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தியாகராஜர் கல்லூரி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 16 ரன்கள் வித்தியாசத்தில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வெற்றி பெற்றது.
இப்போட்டியில், காய்ச்சலுடன் களத்தில் நின்று விளையாடி, தன்னுடைய அணிக்காக 33 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் சந்தோஷ் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.







