இந்தி நடிகர் ஷாரூக்கான் படத்திலிருந்து நயன்தாரா விலகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்து வருகிறார். அவரது ரெட் சில்லீஸ் நிறுவனம், இந்த படத்தைத் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு புனேவில் தொடங்கப்பட்டது. தற்போது ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதால், இதன் படபிடிப்பு பாதியில் நிறுத்திவைக்கப்பட்டது. அவரது மகன் ஜாமீனில் வெளியில் வந்தவுடன் மீண்டும் ஷாரூக்கான் படபிடிப்பில் கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு நயன்தாரா கதாநாயகியாக நடித்து வந்தார். இதுவே நயன்தாரா நடிக்கும் முதல் திரைப்படமாகும். ஆனால் இத்திரைப்படத்திலிருந்து நயன்தாரா விலகியதாக கூறப்படுகிறது. ஆனால் நடிகை நயன்தாரா தரப்பில் இந்த தகவல் மறுக்கப்படுகிறது. மேலும் நயன்தாராவுக்கு பதிலாக நடிகை சமந்தா இத்திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.








