அகில் பாரதிய அகாரா பரிஷத் தலைவர் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தில் இந்து சமய மாடாதி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்  கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாகம்பரி மடத்தில் அகில பார்தியா அகாரா பரிஷித்…

உத்தரப் பிரதேசத்தில் இந்து சமய மாடாதி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்  கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாகம்பரி மடத்தில் அகில பார்தியா அகாரா பரிஷித் (ஏபிஏபி) மடத்தின் தலைவர் நரேந்திர கிரி தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் அவர்உயிரை மாய்த்துக்  கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இல்லத்தில் கைப்பற்றப்பட்ட கடிதங்களில் மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துக்  கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கள் தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/narendramodi/status/1439956983671574537?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1439956983671574537%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fnarendra-giri-head-of-religious-body-akhil-bharatiya-akhada-parishad-died-by-suicide-in-up-2547527

இதனையடுத்து விசாரணை மேலும் தொடர்ந்து வருவதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.