அடுத்த மாதம் ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் உலக இரும்பு மனிதன் போட்டிக்கு நாகர்கோவிலை சேர்ந்த கண்ணன் தேர்வாகியுள்ளார்.
கன்னியாகுமாரி மாவட்டம், நாகர்கோவில் தாமரைகுட்டிவிளையை சேர்ந்த கண்ணன் என்பவர் பிப்ரவரி மாதம் பஞ்சாப்பில் நடந்த சர்வதே இரும்பு மனிதன் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் பெற்றார். இதனை தொடர்ந்து 2023-ம் ஆண்டிற்கான உலக அளவிலான அர்னால்டு கிளாசிக் இரும்பு மனிதன் போட்டி வரும் அக்டோபர் மாதம் 13, 14, 15 தில் ஸ்பெயினில் நடைபெறவுள்ளது. இதற்கு கண்ணன் இந்தியா சார்பாக போட்டியில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ளார். இவர் இதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று கன்னியாகுமாரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அண்ணா விளையாட்டரங்கில் ஐஸ்லாண்டு கிராஸ் 90கிலோ பளுவை துாக்கிகொண்டு 40 மீட்டர் நடந்தார். பின்னர் 100 கிலோ இளவட்ட கல் துாக்குவது என 5 வித பிரிவுகளில் பயிற்சி மேற்கொண்டார். அவரை அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர். இதுகுறித்து கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடுமையாக பயிற்சி கொண்டு நிச்சயம் வெற்றி பெற்று தங்கபதக்கம் பெறுவேன் என நம்பிக்கையாக கூறினார்.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.