வேளாங்கண்ணி திருவிழா இன்றுடன் நிறைவு பெற்றதையடுத்து, கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், ஆண்டுதோறும் மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் தமிழ், ஆங்கிலம், மராத்தி, கொங்கனி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலியும், இரவு 8 மணிக்கு சிறிய தேர்பவனியும் நடைபெற்று வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விழாவின் முக்கிய நிதழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று நடைபெற்றது. இந்நிலையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்றுடன் திருவிழா நிறைவு பெற்றது. இதற்காக தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து தற்போது கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைதொடர்ந்து மாதா மன்றாட்டு, திவ்யநற்கருணை ஆசிர், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. விழாவையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடலோர காவல் படை போலீசாரும் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேளாங்கண்ணியில் இன்று நடைபெற்று வரும் கொடி இறக்கம் நிகழ்ச்சி நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் நேரலை செய்யப்பட்டு வருகிறது. வேளாங்கண்ணி செல்ல முடியாத பக்தர்கள் நேரலையில் பார்த்து மாதாவை வழிபடலாம்..
– இரா.நம்பிராஜன்