முக்கியச் செய்திகள் தமிழகம் விளையாட்டு

’உலகின் நம்பர் 1 செஸ் வீரராவதே எனது லட்சியம்’ – பிரக்ஞானந்தா

சர்வதேச செஸ் போட்டிகளில் வெற்றி பெற்று உலகத்தின் நம்பர் ஒன் செஸ் வீரராக வர வேண்டும் என்பதே தனது லட்சியம் என இளம் வீரர் பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.

செஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வரும் இளம் வீரரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான பிரக்ஞானந்தாவிற்கு அண்மையில் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் பள்ளி நிர்வாகம் சார்பாக பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்க வந்த பிரக்ஞானந்தாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர்கள் சேகர்பாபு, மெய்யநாதன் ஆகியோர் 10 லட்சம் ரூபாய் காசோலை வழங்கி வாழ்த்து கூறினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, தனக்கு அர்ஜுனா விருது கிடைத்த மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். சர்வதேச செஸ் போட்டிகளில் வெற்றி பெற்று, ரேங்கிங் வரிசையில் முன்னேறி உலகத்தின் நம்பர் ஒன் செஸ் வீரராக வர வேண்டும் என்பதே தனது இலக்கு எனவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”ஸ்டாலின் குடும்ப சண்டையை முடிப்பதற்குள், அடுத்த தேர்தல் வந்து விடும்”- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

Jayapriya

இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

G SaravanaKumar

“நல்லேர் பூட்டி” விளை நிலத்தை உழுது விவசாயத்தை போற்றிய கிராம மக்கள்!

Web Editor