சிம்புவிற்கு ஜோடியாகும் மிருணாள் தாக்குர்?

நடிகர் சிம்புவின் 48-வது திரைப்படத்தில் நாயகியாக மிருணாள் தாக்குர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நடிகர் சிம்புவின் சமீபத்திய படமான “பத்து தல” படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை படக்குழு…

நடிகர் சிம்புவின் 48-வது திரைப்படத்தில் நாயகியாக மிருணாள் தாக்குர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் சிம்புவின் சமீபத்திய படமான “பத்து தல” படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.  இந்த திரைப்படத்தை துல்கர் சல்மான்,  ரிது வர்மா மற்றும் ரக்‌ஷன் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.

நடிகர் கமல்ஹாசனின் ”ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம்” தயாரிக்க உள்ளது.  சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாக இருப்பதாகவும்,  முற்றிலும் வித்தியாசமான இருவேடங்களில் சிம்பு நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.  இந்த STR 48 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்தப் படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ், குதிரையேற்றம் உள்ளிட்ட பல பயிற்சிகளை வெளிநாட்டில் மேற்கொண்டு வந்த சிம்பு,  படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில் சென்னை திரும்பினார்.  சமீபத்தில் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு சிம்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தது.  இந்த நிலையில் இத்திரைப்படத்தின் நாயகியாக மிருணாள் தாக்குர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.