#Sivakasi | செப்டிக் டேங்க் குழியில் விழுந்து மகன் பலி… காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழந்த சோகம்!

சிவகாசியில் செப்டிக் டேங்க் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த 5 வயது மகனும், அவரை காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 56 வீட்டு காலனியை சேர்ந்தவர்கள்…

சிவகாசியில் செப்டிக் டேங்க் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த 5 வயது மகனும், அவரை காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 56 வீட்டு காலனியை சேர்ந்தவர்கள் கணேசன்- ராஜேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில் தர்சன் என்ற மகன் இருந்தார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். ராஜேஸ்வரி தனது மகனுடன் விஸ்வநத்தம் பெரியார் காலனியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

அங்கு செப்டிக் டேங்க் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் நிரம்பியிருந்த நிலையில், நேற்று வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த தர்சன் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் தவறி விழுந்தார். நீண்ட நேரமாக மகனை காணாததால் ராஜேஸ்வரி தேடி சென்றபோது தர்சன் பள்ளத்தில் விழுந்ததை பார்த்தார்.

உடனே மகனை காப்பாற்ற ராஜேஸ்வரியும் பள்ளத்தில் குதித்தார். நீண்ட நேரமாக பள்ளத்தில் இருந்து வெளியே வர முயற்சித்தும் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. இந்நிலையில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் நீரில் மூழ்கி உயிரிழந்த தாய் மற்றும் மகனின் உடலை மீட்டனர். தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.