வடகிழக்கு பருவ மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருக்கிறது. இதனை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து, அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட வாரியாக ஆட்சியர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. ஒரு மாவட்டத்திற்கு ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் என தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் கால்நடைகளை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்வருமாறு:
வெள்ளம் தொடர்பான நடவடிக்கைகளை முறையாக கண்காணிக்க மாவட்ட நிலையில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும்.
பொதுமக்கள் அணுகுவதற்கான அவசர தொலைப்பேசி எண் 1800 425 5880.
கால்நடை அவசர சிகிச்சை ஊர்தியை அழைக்க 1962 என்ற இலவச எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் 1,294 அவசர கால நடவடிக்கை குழுக்கள் ஏற்பாடு செய்யப்படும்.
மழையால் பாதிக்கக்கூடிய இடங்களில் கால்நடைகளை பாதுகாக்க 1,749 கால்நடை மீட்பு மையங்கள் மற்றும் தங்குமிடங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.