28.3 C
Chennai
September 30, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

ஆர்யன் கான் கைது: ஷாருக் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த சல்மான் கான்

போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் வீட்டுக்கு சல்மான் கான் சென்றார்.

இந்தியாவின் உல்லாசக் கப்பலான எம்பிரஸ், மும்பையில் இருந்து கோவாவுக்கு நேற்று முன் தினம் புறப்பட்டது. அந்தக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுடன் பார்ட்டி நடக்க இருப்பதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து அந்த கப்பலில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக் குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர், ஏறினர். அப்போது, போதை பார்ட்டியில் கலந்துகொண்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர்களிடம் அவர் கள் விசாரனை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

சுமார் 20 மணி நேர விசாரணைக்குப் பிறகு ஆர்யன் கான் உட்பட 3 பேர் கைது செய்யப் பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை இன்று (திங்கட்கிழமை) வரை காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் அவர்கள் இன்று ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, பிரபல பாலிவுட் ஹீரோ சல்மான் கான், நேற்றிரவு திடீரென ஷாருக்கான் வீட்டுக்குச் சென்றார். ஆர்யன் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் ஷாருக் வீட்டுக்கு சென்றது குறித்து மீடியாவினர் அவரிடம் கேள்வி கேட்க முயன்றனர். அவர் பாதுகாவலர் கள் அதற்கு அனுமதிக்கவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram