பண மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இரண்டாவது முறையாக ஆஜர்

பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இரண்டாவது முறையாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி…

பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இரண்டாவது முறையாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த மாதம் 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து அவர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த ஜனவரி 13-ஆம் தேதி ஜாமீனில், வெளியே வந்தார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எப்பொழுது விசாரணைக்கு அழைத்தாலும் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடிதம் தாக்கல் செய்திருந்தார்.

அண்மைச் செய்தி: ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நபர்… தமிழிசை சவுந்தரராஜனிடம் மலேசியா பெண் எம்எல்ஏ புகார்.

அதைத்தொடர்ந்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த சனிக்கிழமை விசாரணைக்காக கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆஜரானார். அப்போது தொடர்ந்து சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2-வது முறையாக இன்று ஆஜராகியுள்ளார். அவரிடம் மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.