மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “இந்த ஒட்டுமொத்த அமைப்பும் மாணவர்களுக்கு எதிராக அப்பட்டமான கொலைவெறியைக் கொண்டுள்ளது. பீகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது AK-47 ரகத் தோட்டாக்கள் சுடப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
மோடி அவர்களே, மாணவர்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்படாது, அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது? மாறாக, அவர்கள் மீது கொடிய தாக்குதல்களும் மிருகத்தனமும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. டெல்லியில் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளும், பீகாரில் AK-47 ரகத் துப்பாக்கிகளும் சுடப்பட்டன. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் மற்றும் டெல்லி என எல்லா இடங்களிலும் இதே நிலை பின்பற்றப்பட்டது.
நான் முன்பே கூறியதுபோல: இந்த அரசாங்கம் நேர்மையற்றது. உண்மையான சீர்திருத்தம் செய்வது அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டது. அவர்கள் தங்கள் வார்த்தைகளிலிருந்து பின்வாங்கி, மாணவர்களின் குரல்களை அடக்க எல்லா தந்திரங்களையும் பயன்படுத்துவார்கள். மோடி அவர்களே, நாட்டு மாணவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள். மேலும், மாணவர்களைத் தாக்கி நசுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள், மாணவர்கள் மீது அல்ல” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




