சென்னையில், நடமாடும் தேநீர் விற்பனை கடைகளின் செயல்பாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை சார்பில், நடமாடும் தேநீர் விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரூ.3 கோடி மதிப்பில், சென்னையில் 10 கடைகளும், திருப்பூரில் 3 கடைகளும், ஈரோட்டில் 3 கடைகளும், கோவையில் 4 கடைகளும் செயல்படவுள்ளன.
கலப்படமற்ற தரமான தேநீரை குறைந்த விலையில், பொதுமக்களுக்கு விநியோகிக்கும் வகையிலும், மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும் அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், இந்த கடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
https://twitter.com/CMOTamilnadu/status/1470998704156905477
இதன்படி, 20 நடமாடும் தேநீர் விற்பனை கடைகளின் செயல்பாட்டை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







