நாகை அடுத்த செல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளே வெளிப்பகுதியைச் சேர்ந்த 50 பேர் கொண்ட கும்பல் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இக்கல்லூரியில் 800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மாணவி ஒருவரை கேலி செய்ததாக எம்.காம் மற்றும் பி.காம் மாணவர்களுக்கு
இடையே கடந்த சனிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இரண்டு வகுப்பு மாணவர்களையும் அவர்கள் பெற்றோர் முன் கல்லூரி முதல்வர் அவரது அறையில் வைத்து கண்டித்துள்ளார். அப்போது பி.காம் மாணவர்களுக்கு ஆதரவாக கல்லூரியில் பயிலாத நாகை செல்லூர் பகுதியை சேர்ந்த 50 பேர் கொண்ட ரவுடி கும்பல் கல்லூரியின் உள்ளே திடீரென நுழைந்தனர்.
அப்போது, ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தியதைப் பொருட்படுத்தாமலும் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தினர். இந்நிலையில் கல்லூரிக்குள் நடந்து வரும் பிரச்சனையைக் கல்லூரி ஆசிரியர்கள் கண்டித்து கொண்டிருக்கும் வேளையில் வெளியிலிருந்து வந்த ரவுடி கும்பல் மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







