சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்து, அங்கேயே தீர்வு காணும் வகையிலான அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர் வேல்முருகன் பேசுகையில், தமிழ்நாட்டுக்கு ஆளுநர் என்ற பதவியே தேவையில்லை என்றும், நீட் மசோதா, பல்கலை மசோதா, எழுவர் விடுதலை போன்ற சட்ட மசோதாக்களை கிடப்பில் போடும் ஆளுநர் என்ற பதவியே தேவையில்லை என்றும் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து, அவர்களின் பரிந்துரை பெறப்பட வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்னைகளைக் கேட்டு அங்கேயே தீர்வு காணும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும். சட்டமன்ற விடுதிக்குள் சபாநாயகர் அனுமதியின்றி காவல் துறையினர் உள்ளே வரக்கூடாது என்றார்.
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என ஆளுநர் அரசியல் பேசுகிறார். ஆட்டுக்கு தாடி எதற்கு, நாட்டிற்கு ஆளுநர் எதற்கு? என கேள்வி எழுப்பியதுடன், ஆளுநர் என்ற பதவி நீக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்