தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும் ஊரடங்கு நடைமுறைகள் குறித்தும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. . கடந்த வாரம் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகள் மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த ஊரடங்கு வரும் 9-ம்தேதியுடன் நிறைவடைகிறது அதன்பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நடத்தப்படும் இந்த ஆலோசனையின்போது, கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும் மற்றும் ஊரடங்கு நடைமுறைகள் குறித்தும் முதலமைச்சர் கேட்டறிகிறார். தற்போது கொரோனா தொற்று அதிகரிப்பதால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







