கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தற்போது நிலவும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, கீழ்க்காணும் அமைச்சர்களை தொடர்புடைய மாவட்டங்களுக்கு முதலமைச்சர் நியமித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை மாவட்டம்: மா. சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
பி.கே. சேகர்பாபு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்
செங்கல்பட்டு மாவட்டம்: தா.மோ. அன்பரசன், ஊரகத் தொழில் துறை அமைச்சர்
கோவை: அர. சக்கரபாணி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்.
கா. ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர்.
திருவள்ளூர்: சா.மு. நாசர், பால்வளத் துறை அமைச்சர்
மதுரை: பி. மூர்த்தி, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர்.
பழனிவேல் தியாகராஜன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை
தூத்துக்குடி: கீதா ஜீவன், சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர்
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மீன்வளம்-மீனவர் நலத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்.
சேலம்: வி. செந்தில்பாலாஜி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
திருச்சி: கே.என். நேரு, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
திருநெல்வேலி: தங்கம் தென்னரசு, தொழில் துறை அமைச்சர்
ஈரோடு : சு. முத்துசாமி, வீட்டு வசதித் துறை அமைச்சர்
காஞ்சிபுரம்: எ.வ. வேலு, பொதுப் பணித் துறை அமைச்சர்
திருப்பூர்: மு.பெ. சாமிநாதன், செய்தித் துறை அமைச்சர்
வேலூர்: துரைமுருகன், நீர்வளத் துறை அமைச்சர்.
விழுப்புரம் : க. பொன்முடி, உயர் கல்வித் துறை அமைச்சர்.
செஞ்சி கே.எஸ். மஸ்தான், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர்.
கடலூர்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர்
சி.வி. கணேசன், தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்.
நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள்: சிவ.வீ. மெய்யநாதன், சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
கிருஷ்ணகிரி: ஆர். காந்தி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
தஞ்சாவூர் : அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
தேனி: இ. பெரியசாமி, கூட்டுறவுத் துறை அமைச்சர்.
கன்னியாகுமரி: த. மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.