திரையரங்குகளை திறப்பது குறித்து ஊரடங்கிற்கு பின் முடிவு எடுக்கப்படும் என செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
திரைத்துறை மற்றும் சின்னத்திரை சங்கங்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், படப்பிடிப்பில் குறைந்தது 150 பேராவது கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என நடிகர் சங்கத்தினர் கோரிக்கை வைத்ததாகக் கூறினார். திரையரங்குகளை திறப்பது குறித்து ஊரடங்கிற்கு பின் முடிவு எடுக்கப்படும் எனவும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.