தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏராளமான சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சட்டவிரோதமானவையும் அடக்கம். இதனால் அங்கு அடிக்கடி சுரங்க விபத்துகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில் நேற்று (மே 4) நாட்டின் முக்கிய பகுதியான சுடடௌசாவில் ஏற்பட்ட ஒரு சுரங்க வெடிவிபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக அம்மாகாண ஆளுநர் வெளியிட்டுள்ள தகவலின்படி, வாயுக்கள் வெளியேறாமல் தேங்கியதே இந்த வெடிவிபத்திற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது சுரங்கத்தில் 15 பேர் இருந்ததாகவும் அவர்களில் 9 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் மற்ற 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு தேசிய சுரங்க முகமை அறிவித்துள்ளது.







