சென்னையில் லேசான நில அதிர்வு

சென்னையில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து சுமார் 320கி.மீ தொலைவில் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள நிலநடுக்கம் காரணமாக சென்னை மற்றும் ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் 10கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம்…

சென்னையில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து சுமார் 320கி.மீ தொலைவில் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள நிலநடுக்கம் காரணமாக சென்னை மற்றும் ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் 10கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 என நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.