மெட்ரோ ரயில் சேவை: பூந்தமல்லி – போரூர் பகுதிக்கு விரைவில் தொடக்கம்!

பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் வரை மெட்ரோ இரயில்கள் மற்றும் வழித்தடங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனைகள் நிறைவு.

 

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில்களுக்கான பாதுகாப்பு சான்றிதழ்களைப் பெறுவதற்கான சோதனைகள் நிறைவடைந்துள்ளன.

இந்தச் சோதனைகள், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக மத்திய அரசின் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மூலம் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததன் மூலம், விரைவில் ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் இருந்து அதிகாரபூர்வமான பாதுகாப்பு சான்றிதழ் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சான்றிதழ் கிடைத்ததும், இந்தப் பாதையில் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும். இந்த புதிய வழித்தடம், பூந்தமல்லி, அய்யப்பன்தாங்கல், மற்றும் போரூர் போன்ற பகுதிகளிலிருந்து சென்னை நகரின் பிற பகுதிகளுக்கு எளிதாகவும் விரைவாகவும் பயணிக்க உதவும்.

மேலும், இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.