தமிழ்நாட்டின் பொதுவுடைமைவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான சிங்காரவேலரின் 77 வது நினைவு தினத்தையொட்டி அவரின் நினைவிடத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாட்டின் பொதுவுடமைவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான சிங்காரவேலரின் 77வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பொதுவுடமை சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்பியதால் சிந்தனை சிற்பி என அனைவராலும் போற்றப்படும் சிங்காரவேலரின் நினைவு தினத்தை ஒட்டி சென்னை காமராஜர் சாலையில் லேடி வெல்டிங் பள்ளி வளாகத்தில் உள்ள சிங்காரவேலரின் நினைவிடத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் காமராஜர் சாலையில் இருந்து அமைதி பேரணியாக வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும்: மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு!
லேடி வெலிங்டன் வளாகத்தில் சிங்காரவேலருக்கு நினைவரங்கம் அமைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் மீனவ சங்கத்தினர் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வளாக பகுதியில் உள்ள இடத்தை பார்வையிட்டார். வரும் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் நினைவிடம் அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமைவாதியாக கருதப்படும் சிங்காரவேலர் தொழிற்சங்கவாதியாக மே தினத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர். தனது சிந்தனைகள் தொடர்பாக சில நூல்களையும் எழுதி உள்ளார். சிங்காரவேலரின் 77 வது நினைவு தினத்தை ஒட்டி அமைச்சர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இதேபோல், புதுச்சேரியில், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.