33.6 C
Chennai
May 29, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

அம்பேத்கரை பற்றி பலரும் முழுவதுமாக தெரிந்து கொள்வதில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

அம்பேத்கர் பற்றி பலர் முழுவதும் தெரிந்து கொள்ளவில்லை. அவரை அரசியல் சார்ந்து மட்டுமே பேசுகின்றனர் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ” மோடி @ 20 நனவாகும் கனவுகள் ” மற்றும்
“அம்பேத்கர் & மோடி சீர்த்திருத்த சிந்தனைகள், செம்மையான செயல்பாடுகள் ” என்ற
இரு புத்தகங்களின் தமிழ்ப் பதிப்பு புத்தகங்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, மத்திய அமைச்சர் எல் முருகன் ஆகியோர் வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் டாக்டர் எம் ஜி ஆர் பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர்.சுதா சேஷய்யன், இந்திய தொழிநுட்பக் கழக இயக்குநர் வீ.காமகோடி, அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் ஆர். வேல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பேசிய ஆளுநர் ஆர் என் ரவி மேடையில் தெரிவித்ததாவது..

” மோடி @ 20 நனவாகும் கனவுகள் ” மற்றும் “அம்பேத்கர் & மோடி சீர்த்திருத்த சிந்தனைகள், செம்மையான செயல்பாடுகள் ” என்ற இந்த இரண்டு புத்தகங்களை படிப்பதன் மூலம் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று தெரிந்து கொள்ளலாம். சமூகத்தில் வாழும் அனைத்து தரப்பினர் குறித்தும் பேசுவதாக இந்த நூல் உள்ளது. நான் அறிந்த வரையில் அம்பேத்கர் பற்றி பலர் முழுவதும் தெரிந்து கொள்ளவில்லை. அவரை அரசியல் சார்ந்து மட்டும் பேசுகின்றனர்.

இன்று சமூக நீதி என்று பல கட்சிகளும் பேசி வரும் நிலையில்தான் தலித் மக்களுக்கு எதிராக பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன. குடிநீரில் மலத்தை கலப்பது, தலித் பெண்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தலித் பெண்கள்  மீதான பாலியல் வல்லுறவு வழக்குகளில்  கைது செய்யப்படும் 100பேரில்   93 பேர் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக உள்ளனர்.

டார்வின் கோட்பாடு என்பது வளம் கொண்டவர்கள் தங்களுக்கானவற்றை எடுத்துக்
கொள்வார்கள், மற்றவர்கள் அது கிடைக்க பெறாதவர்களாக இருப்பார்கள் ஆனால் அதனை மாற்றி ஒருங்கிணைந்த செயல்பாட்டை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. நாம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இருக்கிறோம்.

11 கோடி வீடுகளில் இன்று கழிவறைகள் உள்ளன. குடிநீர் கிடைக்கிறது. 8 ஆண்டுகளில்
பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இன்று அதிகப்படியான பெண்கள் நாட்டில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நீங்கள் இந்த புத்தகத்தை வாசிக்கும் போது அனைத்து தரப்பு மக்களை பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.


நான் பிரதமரை பற்றி பேசவில்லை மோடியை பற்றி பேசுகிறேன். அவர் நாட்டை தன்
குடும்பமாக பார்க்கிறார். ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் உணவு அளிக்க
செயல்பட்டு வருகிறார். பிரதமர் நாட்டை தன் குடும்பமாக பார்ப்பதால் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 2047 இல் இந்தியா 40 ட்ரில்லியன் பொருளாதாரத்தில் மேம்பாட்டு உலகில் சிறந்ததாக மாறும்.

21 ஆம் நூற்றாண்டின் சிறந்த செயல்பாட்டாளர் பிரதமர் மோடி இதை சொல்வதில்
எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஒவ்வோர் இந்தியரும் சமமாக பார்க்கப்படுகிறார்கள். நாம் அனைவரும் வேறுபட்டவர்கள் தான் ஆனால் நாம் அனைவரும் ஒரு மரத்தின் இலைகள். ஒவ்வொரு இலையும் வேறுபட்டது தான் ஆனால் ஒற்றை மரத்தின் இலைகள்.
என் இளம் நண்பர்களை வேண்டிக் கொள்கிறேன் இந்த புத்தகங்களை படியுங்கள் அதை
பற்றி சிந்தியுங்கள் , நாட்டின் முன்னேற்றத்திற்கு உடன் நில்லுங்கள்” என ஆளுநர் ஆ.என்.ரவி தெரிவித்துள்ளார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading