36.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள்

முழு கொள்ளளவை எட்டிய மணிமுத்தாறு அணை – 1,000 கன அடி நீர் திறப்பு!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணை 19 வது முறையாக அதனை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

தென் மாவட்டங்களில் மிகப்பெரிய அணையான திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணை 19 வது முறையாக அதனை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. 5.5 டி.எம்.சி தண்ணீர் உள்ளடக்கத்தை கொண்ட மணிமுத்தாறு அணை தென் மாவட்டங்களில் வாழ்வாதாரமாக திகழ்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள் : 142 அடியை நெருங்கிய முல்லைப் பெரியாறு அணை..!! -கேரள பகுதிக்கு 2ம் வெள்ள அபாய எச்சரிக்கை…

வரும் நாட்களில் தொடர்ந்து மழை நீடித்தால் அணைக்கான நீர் வரத்து அப்படியே
உபரியாக தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் தற்போது 1300 கன அடி தண்ணீர் உபரியாக பிரதான ஷட்டர் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அணை கட்டப்பட்டதிலிருந்து 1971 ஆம் ஆண்டு அதிகபட்சமாக அணையில் இருந்து ஒரே நாளில் சுமார் 50,000 கன அடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த நீர் மழைக்காலத்தில் தாமிரபரணியில் கலந்து வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராசரால் கொண்டு வரப்பட்ட அணைத் திட்டம். இந்த அணை சிங்கம்பட்டி அருகே 1958 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த அணையில் 118 அடிவரை நீரைத் தேக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading