அரசுக்கு சொந்தமான சந்தன மரத்தை வெட்டிய நபர் கைது

திருச்சி நீதிமன்ற வளாகம் முன்பாக மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் பட்டப்பகலில் சந்தன மரத்தை வெட்டிய நபர் – கையும் களவுமாக பிடிபட்டார்.   திருச்சி நீதிமன்ற வளாகம் முன்பாக உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பரங்கிரி…

திருச்சி நீதிமன்ற வளாகம் முன்பாக மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவில்
பட்டப்பகலில் சந்தன மரத்தை வெட்டிய நபர் – கையும் களவுமாக பிடிபட்டார்.

 

திருச்சி நீதிமன்ற வளாகம் முன்பாக உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பரங்கிரி
வேலுப்பிள்ளை பூங்கா உள்ளது – மாநகராட்சி பராமரித்து வரும் இந்த பூங்காவில்
இயற்கை எழில் கொஞ்சும் வகையில் பலவகை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பட்ட பகலில் தனி ஒரு நபர் மரத்தை வெட்டிக் கொண்டிருப்பதாக செஷன்ஸ்
கோர்ட் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது – தகவலின் அடிப்படையில் உடனடியாக
பூங்காவிற்கு சென்று பார்த்தபோது சந்தன மரத்தை ஒருவர் வெட்டி கொண்டிருப்பதை
பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் – மேலும் அவரை கையும் களவுமாக
பிடித்தனர்.

அவரை விசாரணை செய்ததில் தஞ்சை மாவட்டம் சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்த நொண்டிக்
குமார் என்கிற அழகேசன் என்பது தெரியவந்தது – இதனையடுத்து செஷன்ஸ் கோர்ட்
போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற சந்தன மரத்தை குறி வைத்து வெட்டக் கூடிய கும்பலை சேர்ந்தவரா – இவர் மீது ஏற்கனவே வேறு ஏதும் வழக்கு பதிவு உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் திருச்சி மாநகராட்சியில் மிக முக்கிய இடமாக விளங்கக்கூடிய
நீதிமன்ற வளாகம் முன்பாக துணிகரமாக மரத்தை வெட்டிய சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.