29.7 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் ஹெல்த்

கர்ப்ப காலத்தின் முக்கிய பரிசோதனைகள்

இன்றைய கால சூழலில் தம்பதிகள் குழந்தை பெற்றெடுப்பதை மிகப்பெரிய சாதனையாக கருதுகிறார்கள். அப்படி, முதல்முறை கருவுற்ற தம்பதிகளின் மனதில் மகிழ்ச்சியுடன் கூடிய அச்சம் தொற்றுவதை நம்மால் உணர முடிகிறது. அப்படியான பயத்தை போக்கும் முயற்சியே இந்த தொடர் கட்டுரை பகுதி. அண்மையில், எழுதப்பட்ட ‘பெண்களின் கர்ப்பம் கண்டறியும் முறை’, ‘கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்கள்’ என்ற இரண்டு பகுதிகள் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம், அதன் தொடர்ச்சியாக இந்த பகுதியில், ‘கர்ப்ப காலத்தின் முக்கிய பரிசோதனைகள்’ என்ற இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

 

தாயின் வயிற்றில் இருந்து ஒரு குழந்தை பிறக்கும்போது ஆரோக்கியமான குழந்தையாக பிறக்க, தற்போதைய அறிவியல் உலகில் பரிசோதனைகள் மிக முக்கியமானதாக உள்ளது. இதன் மூலம் தாய் சேய் ஆரோக்கியம் காக்கப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ‘நோய் வரும் முன் காப்போம்’ என்பதைபோல, பெரும்பாலான நோய்களைத் தவிர்க்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது வழக்கம். அதுபோலவே கர்ப்ப காலத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

கருவுற்ற ஒரு பெண், தன்னுடைய ஆரோக்கியத்தை மட்டுமன்றி வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் காக்கும் பொறுப்பில் இருக்கின்றார். பாதிப்புகளை கண்டறிந்து அதனை குணப்படுத்த பரிசோதனைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு பெண் கருவுற்ற உடன் அதனை உறுதி செய்ய பல வழிகள் இருந்தாலும், மருத்துவர்கள் பரிசோதனை செய்து உறுதிப்படுத்தி, உரிய கால இடைவெளியில் ஸ்கேன் செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். கர்ப்ப காலத்தின் 3-வது மாதத்தில் கருப்பையில் கருவின் தன்மையை உறுதிப்படுத்தவும், கருவில் எத்தனை குழந்தைகள் உள்ளன என்பதனை அறிந்துகொள்ளவும் மருத்துவர்கள் ஸ்கேன் மூலமாக பரிசோதனை செய்கின்றனர். மூன்றாவது மாத பரிசோதனையின் போதே கருவின் பாலினத்தை தெரிந்துகொள்ள முடியும் என்பதால், பல தம்பதிகள் குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள முயற்சி செய்கின்றனர். ஆனால், கருவின் பாலினம் கண்டறிவது சட்டப்படி குற்றம் என்பதால் பெரும்பாலான மருத்துவர்கள் கருவுற்று இருக்கும் பெண்ணிடம் பாலினம் தெரிந்துகொள்ள விரும்பவில்லை என்ற படிவத்தில் கையெழுத்து பெற்றுவிடுகின்றனர்.

கர்ப்ப காலத்தின் முதல் கட்டமாக இரத்தத்தில் இரத்தத்தின் அளவு,இரும்பு சத்து, சக்கரை அளவு, நோய் எதிர்ப்பு சக்தி அளவு உள்ளிட்ட பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன . சிறுநீர் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகின்றன

Blood group ABO and Rh factor
HB and iron levels
Blood Glucose
TSH or Thyroid stimulating Hormone
HIV, Hepatitis B, and syphilis,
Immunity status for Rubella (German measles)
Pap smear if one has not been performed recently
Urine test
BP

கருமுட்டை உருவாகியதை உறுதிப்படுத்தும் முதல் ஸ்கேன் சோதனை மாதவிடாய் நின்ற முதல் 30 நாட்கள் முடிந்த பிறகு கண்டறியப்படும். கர்ப்ப காலத்தின் 3-வது மாதத்தில் குழந்தையின் இதயதுடிப்பு உள்ளிட்டவை சரியாக இருக்கிறதா என்பதை கண்டறியப்படும் . 5-6 வது மாதங்களில் மிக முக்கிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில், குழந்தையின் உருவம், உறுப்புகளின் வளர்ச்சி, இதயம், மூளை, நுரையீரல் போன்றவற்றில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, 8-வது மாதத்தில் குழந்தையின் வளர்ச்சி, தொப்புள் கொடி, நஞ்சு அமைப்பு, குழந்தையின் இரத்த ஓட்டம், குழந்தையின் நிலை போன்றவை கண்டறியப்படுகிறது. இதற்கு இடையில், அவ்வப்போது மேற்கொள்ளப்படும் ஸ்கேனில் குழந்தையின் இதயத்துடிப்பின் எண்ணிக்கை, குழந்தையின் எடை ஆகியவற்றை மருத்துவர்கள் பரிசோதனை செய்கின்றனர். மேலும், HCG உள்ளிட்ட சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது.

 

கருவுற்ற பெண் சத்து குறைபாட்டோடு இருந்தால் அதற்குரிய மருந்து மாத்திரைகளை எடுக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஆனால், மருத்துவரின் அனுமதியின்றி சுயமாக மாத்திரைகள் எடுக்க கூடாது. ஏனெனில், சில நேரங்களில் தாய் மற்றும் சேய் இருவருக்கும் அது ஆபத்தை உண்டாக்கிவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறனர்.

 

அதேபோல, கருவுற்ற பெண்களின் உடல் எடை ஒவ்வொரு மாதமும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஆனாலும், கருவுற்ற பெண்ணின் கர்ப்பகாலம் வரை 9 – 10 கிலோ எடை வரை அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மருத்துவரின் ஆலோசனையோடு ஒவ்வொரு மாதமும் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு போன்றவற்றை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. கர்ப்ப காலத்தின் முக்கிய பரிசோதனைகளாக பாலின நோய், ஹெச்ஐவி நோய்த்தொற்று, மஞ்சள் காமாலை, தைராய்டு, இரத்த சோகை, சிறுநீரில் உப்பு, புரத அளவு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

 

ஹீமோகுளோபின் குறைபாடுகளை தவிர்க்க கீரை, உலர்பழங்கள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை தவிர கருப்பையில் வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அதற்குரிய பரிசோதனைகளை எடுக்க மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். இந்த பரிசோதனைகள் அனைவருக்கும் பொதுவானது என்றாலும், கருவுற்ற பெண்ணின் உடல் தன்மையை கொண்டே அடுத்தடுத்த பரிசோதனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே, தேவையின்றி சுயமாக இந்த சோதனைகளை செய்ய கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading