செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் ஒலிம்பியாட் தீபம் விரைவில் அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செஸ் போட்டிகளின் பெருமையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பார்க்கபடுகிறது. பல்வேறு நாடுகளின் போட்டிகளுக்கு இடையே இந்தியா முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தும் வாய்ப்பை பெற்றிருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கூடுதல் சிறப்பாக, சென்னையில் நடைபெறவுள்ள 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வரலாற்றிலேயே முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் தீபம் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதன்முறையாக பிரத்யேகமாக ஒலிம்பியாட் தீபம் ஏற்றப்படுவது இதுவே முதன்முறையாகும். சென்னை மாமல்லபுரத்தில் இருந்து எடுத்து செல்லப்படும் ஒலிம்பியாட் தீபம், அனைத்து கண்டங்களில் உள்ள நாடுகளின் பெருநகரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு மீண்டும் சென்னை கொண்டுவரப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இனி வரும் காலங்களில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் ஒலிம்பியாட் தீபம், இந்தியாவில் இருந்து தான் துவங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை உலக சதுரங்க கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. அதாவது சென்னையில் இருந்து துவங்கப்படும் ஒலிம்பியாட் தீபம், அனைத்து கண்டங்களின் பெருநகரங்களில் எடுத்து செல்லப்பட்டு, இறுதியாக போட்டி நடத்தப்படும் நகரத்திற்கு கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் இந்த முறை துவங்கப்படும் ஒலிம்பியாட் தீபம் அனைத்து கண்டன்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு ஜூலை 28 ஆம் தேதிக்கு முன்பு சென்னை எடுத்து வரப்படும். இந்த பயணத்திற்கான தேதிகள் மற்றும் வழித்தடங்கள் குறித்து FIDE – உலக சதுரங்க கூட்டமைப்பு, அதன் பங்குதாரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
விரைவில் இந்த பயணத்திற்கான தேதிகள் மற்றும் இடங்களை உலக சதுரங்க கூட்டமைப்பு வெளியிடவுள்ளது. இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு கூட்டாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான நாடுகள் பங்கேற்கும் முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டி என்ற பெருமையை, தற்போது மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி அறிவிக்கப்பட்டு, உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
இந்நிலையில் மேலும் ஒரு கூடுதல் வரலாற்று சிறப்பு நிகழ்வாக, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான பிரத்யேக தீபம் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளது.