இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 2 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட் டோர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இமாச்சலபிரதேசத்தில் கடந்த சில நாட்களாகக் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த மாநிலத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கின்னார் (Kinnaur) மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுச்சாலையில் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரெக்காங் பியோ-வில் இருந்து சிம்லா சென்றுகொண்டிருந்த அந்த பேருந்து, ராம்பூர்-ஜூரி பகுதியில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் வந்தபோது, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதியில் உள்ள பாறைகள் உருண்டு விழுந்தன. சில பாறைகள் சென்று கொண்டிருந்த பேருந்து மற்றும் கார்கள் மீது விழுந்தன. மண்சரிவு ஏற்பட்டு சாலை துண்டானது.
இந்த நிலச்சரிவில், சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மற்றும் கார்கள் சிக்கிக்கொண்டன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காரில் சிக்கிய 6 பேரை மீட்டனர். பேருந்தில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.
இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், இந்தோ – திபெத்திய எல்லை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.