30.8 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மீதான கட்சித் தாவல் தடை சட்ட வழக்கு – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் மீதான கட்சித் தாவல் தடை சட்ட வழக்கில், சபாநாயகர் மீது அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம், ஒரு வாரத்திற்குள் காலத்தை நிர்ணயம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. 

எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரத்தை காலவரையின்றி தாமதப்படுத்தக் கூடாது.  இந்த விவகாரத்தில் ஜூன் மாதம் முதல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  பேரவைத் தலைவர் இதனை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  குறைந்தபட்சம் அடுத்த தேர்தலுக்கு முன்பாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து மாநிலத்தில் கடந்த ஆண்டு ஆட்சியை மாற்றி  அமைத்தனா்.  மாநில முதல்வராக ஷிண்டே பொறுப்பேற்றாா்.  அதையடுத்து, சிவசேனா கட்சியின் பெயரும்,  சின்னமும் ஷிண்டே தரப்புக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே, மு தல்வா் ஷிண்டே உள்ளிட்டோா் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை கடந்த மே 11-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம்,  தகுதிநீக்க மனுக்கள் மீது மாநில சட்டப்பேரவைத் தலைவா் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.  எனினும், பேரவைத் தலைவா் ராகுல் நா்வேகா் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதனிடையே, உத்தவ் தரப்பு எம்எல்ஏ சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா்.  அதில், ஷிண்டே தரப்பு எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்வது தொடா்பான விவகாரத்தில் முடிவெடுப்பதை சட்டப்பேரவைத் தலைவா் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டது.

அரசமைப்புச் சட்டத்தின் 32-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில சட்டப்பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

அந்த மனு மீது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,  நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா,  மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

அப்போது,  தகுதிநீக்க மனுக்கள் மீது நியாயமான காலகட்டத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று பேரவைத் தலைவருக்கு கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் சுட்டிக் காட்டினா்.  ‘உச்சநீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் மீதான கண்ணியத்தையும் மரியாதையையும் நாங்கள் எதிா்பாா்க்கிறோம்.

அரசமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையின்கீழ் பேரவைத் தலைவா் ஒரு தீா்ப்பாயம் போல் செயல்படுகிறாா்.  அந்த அடிப்படையில், அவா் நீதிமன்ற அதிகார வரம்புக்கு உள்பட்டவா்.  ஆனால்,  மே மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குப் பிறகு பேரவைத் தலைவா் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே,  தகுதிநீக்க மனுக்கள் மீது முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை ஒரு வாரத்துக்குள் நிா்ணயித்து,  நீதிமன்றத்தில் தெரிவிக்க பேரவைத் தலைவருக்கு உத்தரவிடுகிறோம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

மேலும்,  இந்த விவகாரம் தொடா்பான அடுத்தகட்ட விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.  இருப்பினும் தற்போது வரை பேரவைத் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது,  எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி,  மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் தொடர்ந்து தாமதப்படுத்தி வருவது குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை தோற்கடிக்க முடியாது என்று மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவருக்கு யாராவது அறிவுறுத்துமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading