மகா கும்பமேளா – கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு…60 பேர் காயம்!

உத்தரப் பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்,

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த ஆன்மிக நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, புனித நீராடி வருகின்றனர்.

இந்நிலையில் மிகவும் புனிதமான நாளாக கருதப்படும் மௌனி அமாவாசையான இன்று, விடியற்காலையில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்காக மஹா கும்பம் மைதானத்தில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். 60 பேர் காயமடைந்தனர்.

பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் தற்போது வரை 25 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என நிகழ்ச்சியை கண்காணிக்கும் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.