25.5 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் புகைப்பட வெளியீடு வழக்கு – தள்ளுபடி

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

மதுரை, புதூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்  மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் சிலைகளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரியிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முத்துகுமாரின் மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் உள்ளே புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டு அதன்படியே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்ட பதிலை பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

10% இட ஒதுக்கீடு விவகாரம்: தமிழக அரசின் முடிவுக்கு திருமாவளவன் வரவேற்பு

EZHILARASAN D

திராவிடர்களாக நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும்: பா.ரஞ்சித்

எல்.ரேணுகாதேவி

“தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூடவும்” – நிதின் கட்காரியை சந்தித்து தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை

Web Editor