26.7 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா தமிழகம் வானிலை

அரபிக் கடலில் உருவானது ’பைப்போர்ஜாய்’ புயல்!!

தென்கிழக்கு அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் கடந்த 6 மணி நேரத்தில் 4 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்த ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் பைப்போர்ஜாய் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில், கோவாவுக்கு மேற்கே-தென்மேற்கே 920 கி.மீ தொலைவிலும், மும்பைக்கு தென்மேற்கே 1,050 கி.மீ தொலைவிலும், போர்பந்தரிலிருந்து தென்-தென்மேற்கே 1,130 கி.மீ தொலைவிலும் போர்பந்தருக்கு தெற்கில் 1,430 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : பென்சில் நுனியில் சிற்பம், இலை ஓவியம் – அசத்தும் கோவை சிறுவன்… உதவி கோரும் பெற்றோர்!!

இந்த பைப்போர்ஜாய் புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக தீவிரமடைந்து கிழக்கு மத்திய அரபிக்கடலில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

உக்ரைன் – ரஷ்யா போர்; பெட்ரோல், டீசல் விலை உயருமா?

G SaravanaKumar

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை அறிவித்தார் முதலமைச்சர்

Halley Karthik

தென்காசி தொகுதியில் பழனி நாடாரின் வெற்றி மீண்டும் உறுதி! மறுவாக்கு எண்ணிக்கையில் 368 வாக்குகள் அதிகம் பெற்றார்!!

Web Editor