முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் – ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான களத்தை ஏற்பாடு செய்யும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை அவனியாபுரத்தில் வரும் 15-ம் தேதியும், பாலமேட்டில் 16ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதியில் இருபுறம் கம்பி வலைகள் மூலம் பாதுகாப்பு வேலி அமைத்தல், காளைகள் செல்லும் வழி மற்றும் பந்தல் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி கட்டுமான பணிக்கு தலா 19 லட்சத்து 90 ஆயிரம் வீதம் இரண்டு ஊர்களுக்கும் 39 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த குறுகிய கால ஒப்பந்தத்தில் பங்கேற்க விரும்பும் ஒப்பந்ததாரர்கள் வரும் ஜனவரி 10ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோல், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் பணிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 17 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“பா.ஜ.கவை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்” – வைகோ கண்டனம்!

Halley Karthik

சட்டப்பேரவையில் தனி அணி – ஓ.பி.எஸ் வியூகம்

Jayakarthi

குடியரசுத் தலைவரின் உரையுடன் நாளை தொடங்குகிறது, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்

Arivazhagan Chinnasamy