வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் இன்று வாச்சாத்தி கிராமத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி கிராமத்தில் கடந்த 1992 ஆம்
ஆண்டின் போது சந்தன கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறி காவல்துறையினர்,
வனத்துறையினர், வருவாய் துறையினர் ஆகியோர் இந்த கிராம மக்கள் மீது கடும்
தாக்குதல் நடத்தினர். அப்போது பல பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் ரீதியாக
வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச் செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கடந்த 1996 ஆம் ஆண்டு சிபிஐ விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கை விசாரித்த தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 2011 ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 215 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.
இதில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நான்கு ஐஎஃப்எஸ் அதிகாரிகள் உள்பட வனத்துறையினரின் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டன மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை
உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையை
நீதிபதி வேல்முருகன் அவர்கள் முன்பாக நடைபெற்றது. மனுதாரர் தரப்பில்
வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டத்தில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட
நீதிபதி வேல்முருகன் அவர்கள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி
வைத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று வாச்சாத்தி மலை கிராமத்திற்கு நேரில் வந்து ஆய்வு
செய்துள்ளார். இந்த ஆய்வில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வனத்துறை அலுவலர் அப்பால நாயுடு
உள்ளிட்டோர் இந்த ஆய்வுப் பணியில் உள்ளனர். இந்த ஆய்வின் போது மக்களை
தாக்கப்பட்ட இடங்களையும் பெண்களை பாலியல் செய்யப்பட்ட பகுதிகளையும் ஆய்வு
மேற்கொண்டனர்.







