லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை குவித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. 63 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. இதனையடுத்து மற்ற எந்த மூன்று அணிகள் தகுதிபெறும் என்ற எதிர்பார்ப்புடன் தீவிரமாக சென்றுகொண்டிருக்கிறது போட்டி. இந்நிலையில் இன்று 64வது லீக் போட்டியில் லக்னோ அணியும், டெல்லி அணியும் விளையாடி வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது. இதன்மூலம் லக்னோ அணிக்கு 209 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இதில் அதிகபட்சமாக அபிஷேக் போரல் 58 ரன்கள் எடுத்தார். ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 57 ரன்கள் எடுத்தார். லக்னோ சார்பில் நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகளும், ரவி பிஷோனி, அர்ஷத் கான் இருவரும் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் லக்னோ அணி வென்றால் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு செல்லும்.