முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி – ஒடிசா நோக்கி நகரும் என வானிலை மையம் கணிப்பு..!

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி – ஒடிசா நோக்கி நகரும் என வானிலை மையம் கணிப்பு..!

தென்மேற்கு பருவ மழை இந்த மாதத்துடன் முடிவடையும் சூழலில் இந்தியாவில் மழைக்கான வாய்ப்பு இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.  மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சியின் காரணமாக இன்று காலை வடக்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும், அதேபோல அடுத்த மூன்று நாட்களுக்கு இது தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு சத்தீஸ்கர் நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று ஆந்திராவின் கடலோர பகுதிகள் மற்றும் வருகிற செப்டம்பர் 16, 17 ஆம் தேதிகளில் தெலங்கானாவில் பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு சில இடங்களில் மட்டும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்துவிட்டனர் – நார்வே முன்னாள் அமைச்சர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

Web Editor

மகளின் திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்த தந்தை!! குவியும் பாராட்டு..!!

Web Editor

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்

G SaravanaKumar

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading