முக்கியச் செய்திகள்சினிமா

நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன்…!

நடிகர் அசோக் செல்வன் – நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் திருநெல்வேலியில் இன்று  நடைபெற்றது.

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ‘சூது கவ்வும்’ படத்தில் நடிக்கத் தொடங்கிய அசோக் செல்வன், ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’ உட்பட பலவேறு படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடித்து வெளியான ‘போர்தொழில்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் அசோக் செல்வனுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் ’சிதம்பர ரகசியம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி ‘ஊமை விழிகள்’, ‘இணைந்த கைகள்’ உள்பட பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் அருண் பாண்டியன். பல திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.

அருண் பாண்டியனுக்கு கவிதா பாண்டியன், கிரானா பாண்டியன், மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். ஏற்கனவே இருவருக்கு திருமணமாகிவிட்டது.  இந்நிலையில்,  கீர்த்தி பாண்டியன், தமிழ் சினிமாவில் தும்பா என்கிற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து அன்பிற்கினியாள் என்கிற படத்தில் அவர் நடித்திருந்தார். இந்நிலையில், இவருக்கு நடிகர் அசோக் செல்வனுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன. இருவரும் மேட்சிங் மேட்சிங் உடையணிந்து திருமணம் செய்துகொண்ட அழகிய புகைப்படங்கள் தான் இவை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்; வானிலை ஆய்வு மையம்

EZHILARASAN D

எஞ்சாமி பாடல் சர்ச்சை; இறுதியில் உண்மை வெல்லும்- அறிவின் உருக்கமான பதிவு

G SaravanaKumar

உள்ளாட்சி தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை வெளியாகிறது

G SaravanaKumar

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading