முக்கியச் செய்திகள்தமிழகம்விளையாட்டு

காமன்வெல்த் போட்டியில் தங்க வென்ற லோகப்பிரியா, தந்தையின் கல்லறையில் கண்ணீர் அஞ்சலி

காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்ற வீராங்கனை லோகப்பிரியா தாயகம் திரும்பி தனது தந்தை கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தி கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் பளு தூக்கும் போட்டிக்கு
இந்தியாவிலிருந்து கலந்து கொள்ளத் தேர்வு செய்யப்பட்ட எட்டு நபர்களில் ஒருவர்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கல்லுக்காரன் பட்டி பகுதியைச்
சேர்ந்த செல்வமுத்து பெயிண்டர் மகள் லோகப்பிரியா(22).

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த வாரம் நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று பளுதூக்கும் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் லோகப்பிரியா 52 கிலோ ஜூனியர் பிரிவில் 350 கிலோ பலுதூக்கி தங்கம் என்று சாதனை படைத்தார். லோகப்பிரியா தங்கப்பதக்கம் வென்ற அதே வேளையில் லோகப்பிரியாவின் தந்தை செல்வமுத்து மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் தனது நீண்ட கனவாக இருந்த தங்கப்பதக்கம் என்ற மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாமல் தனது தந்தையின் இறப்புச் செய்தி கேட்டு மனம் உடைந்தார்.  லோகப்பிரியா தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கல்லுக்காரன் பட்டிக்கு வருகை தந்தார் அவரை வரவேற்கும் விதமாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பட்டாசு வெடித்து பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தனர்.

இருந்தும் தனக்கு அளிக்கப்படும் இந்த மரியாதையைப் பார்க்கத் தனது தந்தை இல்லையே என்று மனமுடைந்து தந்தையின் கல்லறைக்குச் சென்று
கண்ணீர் விட்டு கதறி அழுதார்.  அருகே இருந்தவர்கள் லோகப்பிரியாவிற்கு ஆறுதல்
கூறினார்கள். மேலும் தான் பல சாதனைகளைச் செய்யப் போவதாகவும் தன்னுடைய குடும்பம் வறுமை நிலையில் உள்ளதால் அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணி ஆர்டர்களை பெற்ற ஸ்விக்கி

Arivazhagan Chinnasamy

14 மாவட்டங்களுக்கு செயலாளர்களை அறிவித்தார் இபிஎஸ் – திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளராக ஜெயசுதா நியமனம்.!

Web Editor

6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடை: தமிழ்நாடு அரசு அதிரடி

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading