நாடாளுமன்ற குளிர்காலத் தொடரின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த ஆண்டு சற்று தாமதமாக கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கியது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாடாளுமன்றத்தில் இந்தியா-சீனா எல்லை மோதல் விவகாரம் தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன. இதனால் தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியது. டிசம்பர் 29ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்திவைக்கப்பட்டது. மேலும், நடப்பு கூட்டத்தொடரில் 97 சதவிகிதம் மக்களவை ஆக்கப்பூர்வமாக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.