முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்

தாம்பூல பையில் மதுபாட்டில்கள்!! கொந்தளித்த விருந்தினர்கள்!

புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் தாம்பூல பையில் மதுபாட்டில் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் உற்றார் – உறவினர்களுக்கு திருமணம் முடிந்தவுடன் உணவு அருந்திவிட்டு செல்லும் போது தாம்பூலம் கொடுப்பது தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாக உள்ளது. பொதுவாக தாம்பூலப் பைகளில் தேங்காய், பழங்கள், இனிப்புகள் போன்றவற்றையே போட்டு கொடுப்பார்கள். ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக புதுச்சேரியில் நடைபெற்ற நிர்மல் – ஆர்த்தி என்ற மணமக்களின் திருமண வரவேற்பில் தாம்பூலப் பையில் வெற்றிலைப் பாக்கு,தேங்காய் ஆகியவற்றுடன் மதுபாட்டிலும் சேர்த்து வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திருமண வரவேற்புக்கு வந்த பலர் மதுபாட்டில் வைத்து வழங்கப்பட்ட தாம்பூல பைகளை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். இதனிடையே திருமணம் போன்ற சுப மங்கல நிகழ்ச்சிகளில் பண்பாட்டுக்கு மாறாக தாம்பூலப் பைகளில் மதுபாட்டில் வைத்து கொடுப்பது ஏற்கத்தக்கதல்ல என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

இயக்குனரும் நடிகருமான ஈ.ராமதாஸ் காலமானார்; திரைத்துறையினர் இரங்கல்

Yuthi

தமிழ்நாடு பட்ஜெட் 2022: அரசியல் பிரமுகர்களின் விமர்சனங்கள்

Janani

அதிமுகவின் உட்கட்சி தேர்தல் தொடங்கியது

Halley Karthik

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading