கள்ளக்குறிச்சி அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண் பலியான வழக்கில் மெடிக்கல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்ப்பாடி கிராமத்தில் முத்துக்குமாரி என்பவர் மெடிக்கல் நடத்தி வந்துள்ளார். இங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவருக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்தபோது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரி மற்றும் அவரது உதவியாளர் கவிதா ஆகிய இருவரையும் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் முத்துக்குமாரி, கவிதா ஆகியோர் தொடர் குற்ற செயலில் ஈடுபடாமல் இருப்பதற்காக அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில் கடலூர் சிறையில் இருந்த முத்துக்குமாரி, கவிதா ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் ரிஷிவந்தியம் போலீசார் கைது செய்து வேலூர் மகளிர் சிறையில் அடைத்தனர்.